காகித கிட்டங்கியில் பயங்கர தீ: 600 டன் இறக்குமதி காகிதங்கள் நாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மூலக்கடை பகுதியில் உள்ள காகிதக் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 600டன் எடையுள்ள வெளிநாட்டு காகிதங்கள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.

மூலக்கடை பகுதியில் ஒரு தனியார் காகித விற்பனை நிறுவனம் உள்ளது. ரஷ்யா, ஜெர்மன் உள்படபல வெளிநாடுகளிலிருந்தும் காகிதங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு இறக்குமதி இந்தியாமுழுவதும் விற்று வருகிறது இந்த நிறுவனம்.

சிவகாசி உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள முக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள், பத்திரிகைகள் ஆகியவைஇவர்களிடம் தான் காகிதங்கள் வாங்குகின்றன. இவர்களது கிட்டங்கியும் கடையின் பின்பகுதியிலேயே உள்ளது.

இன்று காலை 9.45 மணியளவில் இந்த நிறுவனத்தின் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. மிகவேகமாகப் பரவிய இந்தத் தீயில் 600 டன் இறக்குமதிக் காகிதங்கள் எரிந்து சாம்பலாயின.

இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும். தீயணைப்புப் படையினர் 10 வண்டிகளுடன் வந்து நெடுநேரம்போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது. இதில் ஒரு வீரருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்துஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டங்கியில் 2,000 டன் காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதில் 600 டன் காகிதங்கள்கருகிவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+