மலேசியா: இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
மலேசிய அரசால் கைது செய்யப்பட்ட பெங்களூர் ஐ.பி.எம். சாப்ட்வேர் நிறுவன இன்ஜினியர் நரேந்திர பாபுவிடுவிக்கப்பட்டார். அவர் இன்று இந்தியா திரும்பினார்.
தனது பணி தொடர்பாக மலேசியா சென்ற அவர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தொடர்ந்து தங்கியதாகக்கூறி கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய போலீசார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர்விமான நிலையத்திலேயே அவர் சிறை வைக்கப்பட்டார்.
இந் நிலையில் அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டு இந்திய விமானத்தில் ஏற்றிவிடப்பட்டார். அவர் நாடுதிரும்பிவிட்டதாக பெங்களூர் ஐ.பி.எம். செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications