நெடுமாறனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்வதைபூந்தமல்லி பொடா நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5 தமிழர் தேசியஇயக்கத் தலைவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவிருந்தன. இந்நிலையில் தாயப்பன் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் தங்களை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கக் கோரி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மனு மீதான விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன்ஒத்திவைத்தார். அத்தோடு, நெடுமாறன் உள்ளிட்டவர்கள் மீது நிேற்று பதிவு செய்யப்படுவதாகஇருந்த குற்றச்சாட்டுப் பதிவையும் ஒத்திவைத்தார்.
அதே நேரத்தில் அனைவரின் நீதிமன்றக் காவலையும் ஜூன் 11ம் வரை நீதிபதி ராஜேந்திரன்நீட்டித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications