சென்னை, ஈரோடு, சேலத்தில் தீ விபத்துகள்: வீடுகள், கடைகள் எரிந்தன- 15 பசு மாடுகள் சாவு
சென்னை:
சென்னை கீழ்பாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்லாயின. 15 பசு மாடுகள்தீயில் கருகி இறந்தன.
கீழ்பாக்கம் வாட்டர் டேங்க் சாலையில் இந்த குடிசை வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒருவீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பிற வீடுகளுக்கும் பரவியது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள்அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந்தத் தீ மாட்டுக் கொட்டகைக்கும் பரவியது. இதில் 14 பசு மாடுகள் தீயில் கருகி இறந்தன. மேலும் 6 மாடுகள்படுகாயமடைந்தன. அவை கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
150 குடிசை வீடுகளும் தீயில் நாசமாயின. சில வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டெர்களும் வெடித்துச் சிதறின.இதனால் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் நெடுநேரம் போராட வேண்டி இருந்தது.
150 வீடுகளிலும் இருந்த டிவிக்கள், பாத்திரங்கள், உடைகள் ஆகியவை எரிந்து போயின. இந்த விபத்தினால்சுமார் லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நல்லவேளையாக உயிர்ச் சேதம் ஏதும்ஏற்படவில்லை.
ஈரோடில் தீ : ரூ. 1 கோடி நாசம்
அதே போல ஈரோட்டில் துணிகளுக்கு சாயம் போடும் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம்ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு என்ற இடத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. ஈரோட்டில் தயாராகும்துணிகளுக்கு சாயம் போடுவது மற்றும் துணிகளில் அச்சு பதிப்பது உள்ளிட்ட பணிகள் இங்குதான் செய்யப்படுவது வழக்கம்.
சங்குநகர் என்ற இடத்தில், ஒரு குடிசை வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது.
கொளுந்து விட்டு எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்து இருந்த வீடுகள், சாயப்பட்டறைகளுக்கும் பரவியது. அவை அனைத்தும்தீயில் கருகின. சாயம் பூசுவதற்காக வந்திருந்த சேலைகள் உள்ளிட்ட துணிகள் கருகின.
தீயணைப்புப் படையினர் மிகவும் தாமதமாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பெரும் தீவிபத்தாக அது மாறிவிட்டது. ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சேலத்தில்...
இதே போல சேலம் அயோத்தியாபட்டணம் முனியப்பன் கோயில் அருகே ஹோட்டலில் சமையல்கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஹோட்டல், அரிசி மண்டிகள், காய்கறிக் கடைகள்,ஹோட்டல்கள், பெட்டிக் கடைகள் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமாயின.
இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், மூன்றுஹோட்டல்கள், பெட்டி கடை பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.












Click it and Unblock the Notifications