டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கும்
சென்னை:
டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி ஊழியர்கள்இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக பலமுறை டேங்கர் லாரி உமையாளர்களுடன் பேச்சு நடத்தியும் எநத்ப் பயனும்ஏற்படாததாலும் இதில் அரசு தலையிட மறுப்பதாலும் வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் நாமக்கல் டேங்கர் லாரி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழக ஊழியர்கள் அனைவரும்பங்கேற்கிறார்கள். நாமக்கல்லில் மட்டும் 6,000 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இநத்ப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டெர்கள் வினியோகம் கடுமையாகப்பாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications