30 ரூபாய்க்காக ஒருவர் படுகொலை: முதியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
30 ரூபாய் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை புறநகர்ப் பகுதியான கொடுங்கையூரில் வசித்து வந்தவர் கதிர்வேல். இவரது நண்பர் கிருஷ்ணன்.இவருக்கு வயது 65. கதிர்வேல் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கிருஷ்ணனிடம் ரூ. 30 கடன்வாங்கியிருந்தார் கதிர்வேல். ஆனால் நீண்ட நாட்களாக திருப்பித் தரவில்லை என்று தெகிறது.
30 ரூபாயை திருப்பித் தருமாறு கதிர்வேலை, கிருஷ்ணன் வற்புறுத்தி வந்துள்ளார். இந் நிலையில், இருவரும் மதுஅருந்தச் சென்றுள்ளனர். அப்போது 30 ருபாய் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு,கதிர்வேலை கிருஷ்ணன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கதிர்வேல் அங்கேயே இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து கிருஷ்ணன் தப்பியோடினார். போலீஸார் விரைந்து வந்து கிருஷ்ணனை பாரினை பஸ்நிலையத்தில் வைத்து வளைத்துப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications