பா.ம.க. தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு
தைலாபுரம் (திண்டிவனம்):
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக, தற்போதைய தலைவர் ஜி.கே.மணி மீண்டும்போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
திண்டிவனம் அருகே உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்குச் சொந்தமானபண்ணை இல்லத்தில் பாமக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கு ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்பொன்னுச்சாமி, இணை பொதுச் செயலாளர் பதவிக்கு பு.தா.இளங்கோவன், பொருளாளர் இசக்கிஆகியோர் மட்டுமே போட்டியிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.
பாமக தோன்றியது முதல் ஜி.கே.மணியே தொடர்ந்து தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications