For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்ட் நிறுவன விஷ வாயு தாக்குதல்: மேலும் 60 பெண்களுக்கு மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இரு நாட்களுக்கு முன் விஷ வாயு தாக்கிய நிறுவனத்துக்குள் நுழைந்த 60 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் வாசனை திரவியஙகள்(ஆரோமேடிக்ஸ்) தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந் நிறுவனத்தில்இருந்து ரசாயன வாயு கசிந்தது.

இந்த வாயு அருகே உள்ள பாம்பே பேஷன்ஸ் என்ற ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்துப் பரவியது.அதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

இந்த விஷ வாயுவை சுவாசித்த 30 பெண்கள் மயக்கமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் காலை இந்த ரெடிமேட் ஆடை நிறுவனத்துக்கு மீண்டும் பெண்கள் வேலைக்குச் சென்றனர்.அப்போதும் அந்த கட்டடத்துக்குள் விஷ வாயு பரவி இருந்தது.

இதனால் வேலைக்கு வந்த 60 பெண்களுக்கும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உடல் நிலை தேறி வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்த பெண்களில்ஒருவர் 8 மாத கர்ப்பிணியாவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X