தேர்தல் நிதி சேர்க்க தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் வாய்ப்புள்ளதால்தேர்தலைச் சந்திக்க நிதி சேர்க்கும் பணியை இப்போதே தொடங்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் இடைத் தேர்தல் வரலாம்என்று கருதும் கருணாநிதி உடனே நிதி சேர்க்கும் பணியை தொடகுமாறு திமுகவினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத் திமுகவினர் மட்டும் ரூ. 2 கோடி அளவுக்கு நிதியைத் திரட்ட வேண்டும் எனஅவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அதேபோல, தொழில் நகரமான கோவை திமுகவினர் ரூ. 1.5 கோடி, மதுரை, திருச்சி, சேலம்,நெல்லை போன்ற பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் தலா ரூ. 1 கோடி என்றும், நாகை,திருவாரூர் போன்ற சிறிய மாவட்டங்கள் தலா ரூ. 50 லட்சம் நிதி சேர்க்க வேண்டு என்றும் கருணாநிதிஇலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தேர்தலை மனதில் கொண்டு மாநிலம் முழுவதும் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள்நடத்தவும் திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜூன் 15ம் தேதி முதல் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், முதல் கூட்டத்தைகாஞ்சிபுரம் திமுகவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதில் தான் கலந்துகொள்ளப் போவதகாவும் திமுகவினரிடம் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுகவினர் பண பலம், ஆள் பலம், அதிகார பலத்துடன் இருக்கிறார்கள். நம்மிடம் மன பலம்மட்டும்தான் உள்ளது. எனவே அவர்களை சாதாரணமானவர்களாக நினைத்து விடாமல், தேர்தலைமனதில் கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு அவர் வேண்டுகோள்விடுத்தாக பொதுக் குழுவில் பங்கேற்க முக்கியத் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.