கேன்சரால் பாதிக்கப்பட்ட தாயை காண "லீவ்" கிடைக்காததால் போலீஸ்காரர் தற்கொலை
பாண்டிச்சேரி:
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க செல்ல விடுப்பு கிடைக்காததால்பயிற்சியில் இருந்த போலீஸ்காரர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி எடுத்து வந்தார்.
இவரது தாயார் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில், சில நாட்களுக்கு முன்தாயாரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தந்தி வந்தது.
இதையடுத்து தனது தாயைக் காண செல்ல வேண்டும் என்று கூறி விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்குமார்.
ஆனால், பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.பி. விடுப்பில் சென்றிருந்ததால் குமாருக்குஉடனடியாக விடுப்பு கிடைக்கவில்லை. உயர்அதிகாரிகளுக்கு சுபேஷ் குமாரின் நிலைவிளக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாயாருக்கு உண்மையிலேயே உடல் நிலை சரியில்லையா என்று விசாரித்துசுபேஷ் குமாருக்கு விடுப்பு அளிக்குமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதிலேயே பல நாட்கள் கழிந்துவிட்டன. விடுப்பு கிடைத்தபாடில்லை.
இந் நிலையில் நேற்று காலை முதல் சுபேஷ் குமாரைக் காணவில்லை. அவரை கல்லூரி முழுவதும்தேடிப் பார்த்தனர். அப்போது ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக அவர்கண்டுபிடிக்கப்பட்டார்.
தனது சாவுக்கு, விடுப்பு கிடைக்காததே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.