For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11 ராமேஸ்வரம் மீனவர்களை காணவில்லை!

By Staff
Google Oneindia Tamil News

ராமநிாதபுரம்:

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களைக் காணவில்லை. இவர்களைத்தேடிச் சென்ற மேலும் 4 மீனவர்களையும் காணவில்லை.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்மேகம், கருப்பையா, பாலச்சந்திரன், சண்முகநாதன் ரவிச்சந்திரன்,பாலகிருஷ்ணன், சண்முகவேல், கோபால் ஆகியோர் கடந்த 4ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற படகு கச்சத்தீவு அருகே சென்றபோது சேதமடைந்தது.

இதைத் தொடர்ந்து சண்முகவேலு மட்டும் தப்பி ராமேஸ்வரம் வந்தார்.

கடலில் தத்தளித்துக் கொண்டுள்ள மீனவர்களை மீட்க 4 மீனவர்கள் கச்சத்தீவுக்கு விரைந்தனர்.ஆனால் அவர்களும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து மேலும் 4 மீனவர்கள் கொண்ட ஒரு படகு அவர்களைத் தேடி சென்றுள்ளது. இதுதொடர்பாக கடலோரக் காவல்படைக்கும், தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X