For Daily Alerts
Just In
பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள்: ஜூன் 30ம் தேதி தொடக்கம்
சென்னை:
பத்தாம் வகுப்பில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத்துணைத் தேர்வுகள் வரும் 30 ம் தேதி தொடங்குகின்றன.
இந்தத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஜூன் 10ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இதற்குக் கட்டணம் ரூ. 125.
மெட்ரிகுலேஷன் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு ரூ. 135ம், 2 பாடங்கள் என்றால் ரூ. 235ம், 3பாடங்கள் என்றால் ரூ. 335ம் கட்ட வேண்டும்.
ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 85ம், 2 பாடத்திற்கு ரூ. 135ம், 3பாடங்களுக்கு ரூ. 185ம் கட்ட வேண்டும்.
ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
cinema missing rameswaram thatstamil university fishermen muslims tamilnadu islam tamil news kalimuthu leopard meenavar re exam
Story first published: Saturday, June 7, 2003, 5:30 [IST]