நல்ல கதை வேணுமா?: கிருஷ்ணசாமி
தூத்துக்குடி:
கமல்ஹாசனுக்கு நல்ல கதைகள் ஏதும் வேண்டுமென்றால் எங்களிடம் கேட்கலாம். அதைவிட்டுவிட்டு சண்டியர்போன்ற ஜாதி வெறியைத் தூண்டும் படம் எடுப்பதை அவர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் வன்முறையும் செக்ஸ்சும் தான் விஞ்சி நிற்கிறது. இளைஞர்களை சினிமாசீரழித்து வருகிறது. சமீபத்தில் பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை கூட ருத்ரா பட ஸ்டைலில்தான் நடந்ததாகக் கூறுகிறார்கள்.
சாக்லேட் படத்தில் தவறான செக்ஸ் உறவு சித்தரிக்கப்படுகிறது. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்புஏதும் இல்லை. வீச்சரிவாள் கலாராச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டுமா என்பது தான கேள்வி,
எங்களிடம் கேட்டால் கூட நல்ல கதைகளை அவருக்கு நாங்கள் தருவோம் என்றார்.
ஜாதிக் கலவர அபாயம்: சண்டியர் ஷூட்டிங் திடீர் ரத்து