பாதுகாப்பு தராதது ஏன்?: உள்துறை செயலாளர் விளக்கம்
சென்னை:
சண்டியர் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தருவது தொடர்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்தான்முடிவெடுக்க முடியும் என்று தமிழக உள்துறைச் செயலாளர் சையத் னீர் ஹோதா கூறியுள்ளார்.
இந் நிலையில், இந்த விவகாரம் குறிதது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா,
சண்டியர் பட பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர்தான் முடிவு எடுக்கமுடியும். மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்குத் தக்கவாறு முடிவுசெய்யும் அதிகாரம் அவருக்குத்தான் தான் உண்டு என்றார்.
இதனால் இந்த விவகாரத்தில் கமல்ஹாசனை சந்திக்க முதல்வர் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஒருவேளைகமல் நெருக்குதல் தந்தால் நாளை மறுதினம் தான் அவரை ஜெயலலிதா சந்திக்க வாய்ப்புள்ளது.
திட்டக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்லும் ஜெயலலிதா நாளை தான் சென்னை திரும்புகிறார்.
ஜாதிக் கலவர அபாயம்: சண்டியர் ஷூட்டிங் திடீர் ரத்து