For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பு தராதது ஏன்?: உள்துறை செயலாளர் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சண்டியர் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தருவது தொடர்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்தான்முடிவெடுக்க முடியும் என்று தமிழக உள்துறைச் செயலாளர் சையத் னீர் ஹோதா கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் சண்டியர் படப்பிடிப்பு நேற்று தொடங்குவதாக இருந்தது. போலீஸ் பாதுகாப்பு இல்லாதகாரணத்தால் படப்பிடிப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந் நிலையில், இந்த விவகாரம் குறிதது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா,

சண்டியர் பட பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர்தான் முடிவு எடுக்கமுடியும். மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்குத் தக்கவாறு முடிவுசெய்யும் அதிகாரம் அவருக்குத்தான் தான் உண்டு என்றார்.

இதனால் இந்த விவகாரத்தில் கமல்ஹாசனை சந்திக்க முதல்வர் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஒருவேளைகமல் நெருக்குதல் தந்தால் நாளை மறுதினம் தான் அவரை ஜெயலலிதா சந்திக்க வாய்ப்புள்ளது.

திட்டக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்லும் ஜெயலலிதா நாளை தான் சென்னை திரும்புகிறார்.

ஜாதிக் கலவர அபாயம்: சண்டியர் ஷூட்டிங் திடீர் ரத்து

  • சண்டியரை தடுக்க சென்சார் போர்டுக்கு கிருஷ்ணசாமி கடிதம்
  • கெளதமியுடன் வந்த கமல்!!
  • சண்டியரை எதிர்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X