கிணற்றில் விழுந்த நாய்க் குட்டிகள்: காப்பாற்றிய தீயணைப்புப் படை!
சென்னை:
கிணற்றுக்குள் விழுந்து விட்ட 3 நாய்க் குட்டிகளை தீயணைப்புப் படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடியபோது, தெருவோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டன.
நாய்களின் சப்தம், துரத்தல் ஆகியவற்றைப் பார்த்த அப் பகுதியில் வசித்து வரும் விலங்கு ஆர்வலர் (இவரதுவீட்டில் 10 நாய்கள் உள்ளனவாம்) ஒருவர், 3 நாய்களும் கிணற்றில் விழுந்து விட்டதைப் பார்த்து பதைபதைத்தார்.
உடனே வில்லிவாக்கம் தீயணைப்புப் படை அலுவலகத்திற்கு தகவல் தந்தார். நாய் தானே என்று விட்டுவிடாமல்போன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் இறங்கி 3 ஜீவன்களையும் பத்திரமாக மீட்டனர்.
அந்த நாய்களை தானே பராமரித்துக் கொள்ள அந்த விலங்குகள் ஆர்வலர் முன் வந்து அவற்றை வாங்கிச்சென்றார்.
நாய்களைக் காப்பற்ற வந்த தீயணைப்புப் படை வீரர்களையும், முயற்சி எடுத்த அந்த ஆர்வலரையும் பாராட்டியேதீர வேண்டும்.