For Daily Alerts
Just In
மாணவி மீது ஆசிட் வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்விளை என்ற இடத்தில் ஜீனா குமாரி என்ற மாணவி மீதுஅமிலம் ஊற்றிய வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கருங்கல்விளையைச் சேர்நத ஜீனா குமாரியை, அதே பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் என்ற வாலிபர்விரட்டி வந்தார். தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், அவரை ஜீனா குமாரி கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ், ஜீனா குமாரி மீது அமிலம் வீசினார்.
இதில் படுகாயமடைந்த ஜீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜோன்ஸைக் கைது செய்தனர். அவரை குண்டர்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுமாறு மாவட்டக் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அந்தச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஜோன்ஸால் ஓராண்டுக்கு ஜாமீனில் கூட வெளியில் வர முடியாது.
Comments
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu simran sherin kiran tamil news ramya pictures sham jothika vijay kanth aunties sex
Story first published: Tuesday, June 17, 2003, 5:30 [IST]