3 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திடீர் நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
மீண்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்களைப் பந்தாடியுள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதா.
வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கோபால், ஜெ. பேரவைச் செயலாலர் நீலகண்டன் எம்.எல்.ஏ.ஆகியோர் அந்தந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் தலைமைக் கழக பேச்சாளருமானகழிஞ்சூர் செல்வராஜ் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே போல திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், அம் மாவட்ட ஜெ. பேரவைச்செயலாளர் காமராஜ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.காமராஜும் அந்தப் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவராக முன்னாள் எம்.பி. மார்க்கபந்துவும்,அந்த மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ. நீலகண்டனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பையூர் சந்தானும், திருவாரூர் மாவட்டச் செயலாளராகஆர்.காமராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அமைச்சரவையை மாற்றிய கையோடு சில மாவட்டச் செயலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பினார்ஜெயலலிதா. இந் நிலையில் மீண்டும் மாற்றம் செய்துள்ளார்.