கோட்டையில் தற்கொலையைத் தடுத்த போலீஸ்
சென்னை:
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற 3 குழந்தைகளின் தந்தையை,போலீஸார் தடுத்துக் காப்பாற்றினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.வறுமையில் வாடி வரும் கண்ணன், முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு மனு கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை அவருக்கு எந்த உதவியுடம் கிடைக்கவில்லை. இதையடுத்து கோட்டையிலேயே மகள்களுடன்தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனும், 3 மகள்களுடன் மீண்டும் சென்னைக்கு வந்தார் கண்ணன்.
கோட்டையில் முதல்வர் அலுவலகத்தின் வெளியே காத்திருந்தார். ஜெயலலிதா வெளியே வரும்போது விஷம்குடிக்கத் தயாராக இருந்தார்.
அப்போது பார்வையாளர்களின் பைகளை சோதனையிட்ட போலீசார் இவரது பையில் விஷ பாட்டில் இருந்ததைக்கண்டுபிடித்து அதைப் பறிமுதல் செய்தனர். பின்னர் கண்ணனை, கோட்டைக்குள் இருக்கும் மன நல ஆலோசனைமையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டையில் நடக்க இருந்த தற்கொலையைத் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்கள் பாஸ்கரன்மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸ் உயர் அதிகாகள் பாராட்டி தலா ரூ. 250 பரிசும் வழங்கினர்.












Click it and Unblock the Notifications