சென்னையில் விபச்சார வேட்டை: மலையாள டிவி நடிகை- தாய், மகள் பிடிபட்டனர்
சென்னை:
சென்னையில் நடந்த விபச்சார வேட்டையில் மலையாள டிவி நடிகை பிடிபட்டார். அதே போல இன்னொருஇடத்தில் விபச்சாரம் செய்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர்.
மலையாள டிவி நடிகை அரசி. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தலைமைச் செயலக ஊழியர் காலனி பகுதியில் உள்ளஒரு பங்களாவில் சில கேரள பெண்களோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசி பிடிபட்டார். அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தவர்போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்த வீட்டிலிருந்து சான்ட்ரோ கார், வெளிநாட்டு ஆணுறைகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. அரசிக்கும் கஸ்டமர்களுக்கும் சமையல் செய்து கொடுத்து வந்த பைஜூ, கார் டிரைவர்வேணுகோபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, கே.கே.நகர் வன்னியர் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட விஷ்ணுகாந்தம்,அவரது மகள் பத்மா ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
டிவி சீயல்களில் டப்பிங் கொடுத்து வரும் சூர்யா என்பவரும் விபச்சார வேட்டையில் சிக்கினார். அவருடன் 2பெண்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications