For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 27ம் தேதி பேச்சு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

ஜூலை 2ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள அரசு ஊழியர்கள், ஆசியர்கள்முடிவு செய்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தத்தைத் தடுகும் வகையில் ஊழியர்களுக்கு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியில் டீக் குடிக்கப் போனால்கூட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதையெல்லாம் மீறி காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்துச் சங்கங்களும் ஒன்றாக சேர்ந்துவிட்டன. இதனால் போராட்டம் நடந்தால்மாநில அரசு நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளும் ஒட்டுமொத்தமாக செயலிழந்து, ஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது.

இதனைத் தவிர்க்க அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சில ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், முக்கிய சங்கங்களான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டோ ஜியோ ஆகியவற்றின் நிர்வாகிகளுக்குஇன்னும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.

வரும் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசின் தகவல் தெவிக்கிறது. அரசுஊழியர்களுக்கு சலுகைகள் பறிக்கப்பட்ட பிறகு, அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள 3-வதுபேச்சுவார்த்தையாகும் இது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X