மாஜி மந்திரி முல்லைவேந்தன் நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு:
தர்மபுரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பாவி வாலிபர் ஒருவர் பலியானதுதொடர்பான வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் தாராபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெடிகள் போடப்பட்டன.முல்லைவேந்தனின் ஆதரவாளர்கள் அப்போது கூட்டத்துக்குள்ளும் வெடிகளை வைக்க அவை வெடித்துச் சிதறிதாஜூதின் என்ற வாலிபரின் உயிரைப் பறித்தது.
இச் சம்பவம் தொடர்பாக முல்லைவேந்தன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்துமுல்லைவேந்தன் தலைமறைவாகி விட்டார். தான் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முல்லைவேந்தனும், நவாப்என்பவரும் ஈரோடு மாவட்டம் தாராபுரம் குற்றவியல் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன் சரணடைந்தனர்.












Click it and Unblock the Notifications