காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டிகள் அடிதடி: போலீஸ் குவிப்பு
சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன் கோஷ்டிக்கும் இளங்கோவன் கோஷ்டியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு எந்த நேரமும் அடிதடி நடக்கலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவை அவமதித்த வாசன் கட்சியை விட்டு விலக வேண்டும், இப்படிக்கு காமராஜரின் உண்மைத்தொண்டர்கள் என்று சென்னை நகரில் திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந் நிலையில் கட்சிஅலுவலத்துக்குள்ளேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் மத்தியில் டென்சன் பரவியது. அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சக்திவடிவேலு தலைமையில், அங்குள்ள இளங்கோவனின் அறையைமுற்றுகையிட்டனர்.
இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையறிந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர்.அவர்களுக்கும் வாசன் கோஷ்டினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர்அடித்துக் கொள்ளும் சூழல் உருவானது.
இச் சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் இரு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications