சிறையில் ஓராண்டை தொடப் போகும் வைகோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வரும் ஜூலை 11ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.இதையடுத்து ஜூலை 11ம் திேதயை தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க மதிமுக முடிவு செய்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக அவர் மீது பொடா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்ஜெயலலிதா.

இந்த வழக்குப் பதிவானபோது வைகோ அமெரிக்காவில் இருந்தார். இதையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தைபாதியிலேயே முடித்துக் கொண்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாதிரும்பினார்.

11ம் தேதி சென்னை விமான நிலையத்திலேயே அவரை தமிழக போலீஸ் கைது செய்தது. பொடா சட்டத்தின் கீழ்வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் பிறகு அவரை மத்திய அரசு காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால், துணைப் பிரதமர் அத்வானி-ஜெயலலிதாவின் அண்டர்கிரவுண்ட் டீல் காரணமாக வைகோவை மத்திய அரசு கைவிட்டது.

அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வர மறுத்துவிட்டார் வைகோ. தன் மீது பொடா சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவையே எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார் வைகோ.

இந்தப் பிரிவு அரசியல் சட்டம் கொடுத்துள்ள தனி மனித பேச்சுரிமைக்கு எதிராக இருப்பதால் பொடா சட்டத்தில்இருந்து இந்தப் பிரிவை அகற்ற வேண்டும் என வைகோ கோரியுள்ளார்.

இந் நிலையில் திமுகவின் தொடர் வற்புறுத்தல் காரணமாக பொடா மறு ஆய்வுக் கமிட்டி என்ற ஒன்றை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. இந்தக் கமிட்டி பொடா சட்டத்தின் கீழ் நடந்துள்ள கைதுகள் குறித்து ஆராயும் என்றும்,தவறான கைதுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கமிட்டி செயல்படுவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

பொடா விவகாரத்தை திசை திருப்புவதற்காகவும், காலத்தைக் கடத்தவுமே இந்தக் கமிட்டிஉருவாக்கப்ப்டடுள்ளதாக சமீபத்தில் வைகோவைச் சந்தித்துவிட்டு வந்த காங்கிரஸ் ஜனநாயகப் பேரைவத்தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந் நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் வைகோஅடுத்த மாதம் 11ம் தேதியுடன் ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்கப் போகிறார்.

இந்த தினம் எங்களைப் பொறுத்தவரை தியாகிகள் தினம் என்று மதிமுக அறிவித்துள்ளது. இதனால் இனி ஜூலை11ம் தேதியை மதிமுக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+