சிறையில் ஓராண்டை தொடப் போகும் வைகோ
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வரும் ஜூலை 11ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.இதையடுத்து ஜூலை 11ம் திேதயை தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க மதிமுக முடிவு செய்துள்ளது.
இந்த வழக்குப் பதிவானபோது வைகோ அமெரிக்காவில் இருந்தார். இதையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தைபாதியிலேயே முடித்துக் கொண்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாதிரும்பினார்.
11ம் தேதி சென்னை விமான நிலையத்திலேயே அவரை தமிழக போலீஸ் கைது செய்தது. பொடா சட்டத்தின் கீழ்வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு அவரை மத்திய அரசு காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால், துணைப் பிரதமர் அத்வானி-ஜெயலலிதாவின் அண்டர்கிரவுண்ட் டீல் காரணமாக வைகோவை மத்திய அரசு கைவிட்டது.
அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வர மறுத்துவிட்டார் வைகோ. தன் மீது பொடா சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவையே எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார் வைகோ.
இந்தப் பிரிவு அரசியல் சட்டம் கொடுத்துள்ள தனி மனித பேச்சுரிமைக்கு எதிராக இருப்பதால் பொடா சட்டத்தில்இருந்து இந்தப் பிரிவை அகற்ற வேண்டும் என வைகோ கோரியுள்ளார்.
இந் நிலையில் திமுகவின் தொடர் வற்புறுத்தல் காரணமாக பொடா மறு ஆய்வுக் கமிட்டி என்ற ஒன்றை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. இந்தக் கமிட்டி பொடா சட்டத்தின் கீழ் நடந்துள்ள கைதுகள் குறித்து ஆராயும் என்றும்,தவறான கைதுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கமிட்டி செயல்படுவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.
பொடா விவகாரத்தை திசை திருப்புவதற்காகவும், காலத்தைக் கடத்தவுமே இந்தக் கமிட்டிஉருவாக்கப்ப்டடுள்ளதாக சமீபத்தில் வைகோவைச் சந்தித்துவிட்டு வந்த காங்கிரஸ் ஜனநாயகப் பேரைவத்தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந் நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் வைகோஅடுத்த மாதம் 11ம் தேதியுடன் ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்கப் போகிறார்.
இந்த தினம் எங்களைப் பொறுத்தவரை தியாகிகள் தினம் என்று மதிமுக அறிவித்துள்ளது. இதனால் இனி ஜூலை11ம் தேதியை மதிமுக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications