For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருட்டு விசிடி வழக்கு: அழகிரியின் வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திருச்சி சிறையில் மு.க.அழகிரியிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையில் உள்ள அழகிரியின் ராயல் வீடியோ கடையில் திருட்டு விசிடிக்கள் இருந்தது தொடர்பான வழக்கில்,திருச்சி சிறையில் அவரிடம் போலீஸார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தை போலீசார் இப்போது மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அழகிரியை மீண்டும் சந்தித்த ஸ்டாலின்:

தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியை, திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் மீண்டும் சந்தித்தார்.

சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டாலினுடன் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர்துரைமுருகன், திருச்சி துணை மேயர் அன்பழகன், திருச்சி எம்.எல்.ஏ. பரணி குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X