For Daily Alerts
Just In
வளைகுடா இந்தியர்களுக்கும் இரட்டை குடியுரிமை
கொச்சி:
வளைகுடா நாடுகளில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த என்.ஆர்.ஐகளுக்குத் தான்இரட்டைக் குடியுரிமைத் தருவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. இப்போது வளைகுடாஇந்தியர்களுக்கும் இந்தச் சலுகையைத் தர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.சி.தாமஸ் இதனை கொச்சியில் தெரிவித்தார்.
துபாயில் வசித்து வரும் மலையாளிகள் சார்பில் நடந்த விழாவில் இதனை தாமஸ் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, July 14, 2003, 5:30 [IST]