For Quick Alerts
For Daily Alerts
Just In
கல் குவாரிகளில் இருந்து 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
தர்மபுரி:
கல் குவாரிகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 7 சிறுவர்களை தர்மபுரி மாவட்ட போலீஸார் மீட்டுள்ளனர்.
போச்சம்பள்ளியைச் சேர்ந்த சில குடும்பங்கள், அப் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் கொத்தடிமைகள் போலஒப்பந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தோடு வேலை செய்து வரும் அவர்களில் 7 சிறுவர்களும்அடங்குவர்.
பால் முகம் மாறாத அந்தச் சிறுவர்களும் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதை அறிந்தசில சமுக நல அமைப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக்கிடம் புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை மீட்க ஆட்சித் தலைவர் சித்திக் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் படைஅங்கு விரைந்து சிறுவர்களை மீட்டது.
அவர்களை பள்ளியில் சேர்க்கவும் ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்குத் தேவையானஉடைகள், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Comments
cinema sri lanka actress sneha Prabhakaran thatstamil trisha vikram tamilnadu shakeela simran madhavan kiran tamil news ramya jothika amoga sakeela
Story first published: Thursday, July 17, 2003, 5:30 [IST]