பஸ் மோதி 3 பேர் பலி: இறந்தோர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, கோயம்பேடு வெளியூர் பேருந்து நிலையம் அருகே, டவுன் பஸ் ஹோட்டலில் புகுந்து 3 பேர் பலியானசம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தோரின் குடும்பத்தினருக்குநிதியுதவியும் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் 100 அடி சாலையில் நேற்றுவேகமாக வந்த அரசு டவுன் பஸ், ஹோட்டல் ஒன்றில் புகுந்தது. இதில் அங்கு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர்பரிதாபமாக பலியானார்கள். பஸ் டிரைவர்கள் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கியும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 15,000 உதவியும் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, பஸ் டிரைவருக்கு திடீரென மராடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் தான் விபத்து நேர்ந்ததாகவும்டிரைவர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் அதி வேகத்தில் சென்ற ஒரு லாரியை முந்துவதற்காக பஸ்சின்டிரைவரும் படு வேகத்தில் அதை இயக்கியதால் தான் விபத்து நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+