For Daily Alerts
Just In
தீயணைக்கச் சென்ற வீரர் மாரடைப்பில் மரணம்
சென்னை:
சென்னையில் தீயணைக்கும் வண்டியை வேகமாய் ஓட்டிய தீயணைப்பு வீரர் மாரடைப்பு ஏற்பட்டுமரணமடைந்தார்.
வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. 52 வயதாகும் இவர், செங்குன்றம் தீயணைப்புநிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
மாதவரம் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாகத் தகவல் வந்தது. இதையடுத்து தீயணைக்கும் வண்டி அங்குகிளம்பியது. வண்டியை ஆரோக்கியசாமி வேகமாக ஓட்டிச் சென்றார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து வண்டியை நிறுத்திவிட்டு ஆரோக்கியசாமிமயங்கினார். உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
Comments
Story first published: Tuesday, July 22, 2003, 5:30 [IST]