பிரியமான தோழி பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள கோல்டன் தியேட்டரில் பிரியமான தோழி படத்தின் திருட்டு விசிடிதயாரிக்கப்பட்டதையடுத்து தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, விக்ரமன் இயக்கி, மாதவன்- ஜோதிகா நடித்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பிரியமான தோழி. இந்தப் படத்தை யாரும் திருட்டுத்தனமாக விசிடி எடுத்து விடாமல்தடுப்பதற்காக படத்தின் ஒவ்வொரு பிலிம் பிரதியிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.
இந் நிலையில் திருத்தணியில் உள்ள கோல்டன் தியேட்டரில் பிரியமான தோழி படத்தை திருட்டுத்தனமாகவிசிடியில் பதிவு செய்வதாக ஏவி.எம். நிறுவனத்திற்குக் தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருட்டு விசிடி தடுப்புப்பிரிவு போலீஸில் ஏவி.எம். நிறுவனம் புகார் கொடுத்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது, கோல்டன் தியேட்டரில் திருட்டுத்தனமாக விசிடி தயாரிக்கப்பட்டதுஉறுதியானது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர், மேலாளர், ஆபரேட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தியேட்டருக்கு சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications