பள்ளி வேன் மீது ரயில் மோதி 4 குழந்தைகள் சாவு: டிரைவர் தப்பினான்
கரூர்:
கரூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூல் வேன் மீது ரயில்மோதியதில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாயினர். கிளீனரும் உயிரிழந்தார். மேலும் 4 குழந்தைகளின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ரயில் மோத வருவதை அறிந்த வேனின் டிரைவர் இறங்கி ஒடி உயிர் தப்பிவிட்டான்.
திண்டுக்கல்- ஈரோடுக்கு இடையே சோதனைரீதியில் இந்த ரயில் இயக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்தது.அந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வழக்கம் போலவேனில் நேற்று மாலை வீடுகளுக்குக் கிளம்பினர்.
வேனில் டிரைவர், கிளீனர் தவிர 8 மாணவ, மாணவியர் இருந்தனர்.
அப்போது, கரூர்-திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில், எமூர் என்ற இடத்தில், ஆளில்லா ரயில்வே கிராசிங்கைக் கடக்கவேனின் டிரைவர் கடக்க முயன்றான். ரயில் வருகிறதா என்பதை எல்லாம் பார்க்காமல் தண்டவாளத்தில் வேனைஓட்டியுள்ளான்.
தண்டவாளத்தில் வேனை ஓட்டிய பிறகு தான், சோதனை ரயில் படு வேகத்தில் வருவதை டிரைவர் பார்த்துள்ளான்.இதையடுத்து அவன் மட்டும் வேனில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டான்.
தண்டவாளத்தில் நின்றிருந்த வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளமானது. மேலும் சுமார்300 மீட்டர் தூரத்துக்கு வேனை ரயில் இழுத்துச் சென்றது.
இதில் வேனில் இருந்த 4 பள்ளிக் குழந்தைகள் மற்றும் கிளீனர் ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர். இறந்தனர். மேலும் 4 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிகிறது.
தண்டவாளத்தில் ஏறியவுடன் வேனில் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டதாகவும், இதனால் தான் விபத்துஏற்பட்டதாகவும் அப் பகுதி மக்களிடம் டிரைவர் கதை விட்டுள்ளான். இப்போது அவன் தலைமறைவாகிவிட்டான்.
அந்த ரயிலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அமர்நாத்உள்ளிட்டவர்கள் பயணம் செய்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications