காட்டுப் பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கிய சிறுத்தை!
ஊட்டி:
ஊட்டி அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தை சிக்கியது. 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுஅந்த சிறுத்தை விடுவிக்கப்பட்டது.
ஊட்டிக்கு அருகே சிங்காரா மின் திட்டப் பகுதியில் காட்டுப் பன்றிகள் அதிகம் இருப்பதால் அவற்றைப் பிடிக்கஅப்பகுதியில் பொறிகளை வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு பொறியில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இரும்புக் கம்பிகளால் ஆன பொறியிலிருந்துஅந்த சிறுத்தை வெளியில் வர முயன்றது. ஆனால் டியவில்லை, இதனால் பயங்கரமாக குரல் எழுப்பியபடிஇருந்தது.
சிறுத்தை சிக்கிய தகவல் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் பொறியில் சிக்கிய சிறுத்தையை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
கூண்டு ஒன்று சிறுத்தையின் அருகே வைக்கப்பட்டது. பின்னர் பொறியிலிருந்து சிறுத்தையை விடுவித்தனர். அதுதிறந்திருந்த கூண்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதை அங்கிருந்து பத்திரமாக கொண்டு சென்று காட்டுப் பகுதியில்விட்டனர்.
மயக்க மருந்து ஏதும் கொடுக்காமல், சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பின், பொறியில் இருந்து விடுவித்துசிறுத்தையை பத்திரமாக காட்டுக்குள் விட்டனர் வனத்துறையினர்.