For Daily Alerts
Just In
பஞ்சாயத்துத் தலைவர் கார் மீது குண்டு வீச்சு
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பஞ்சாயத்துத் தலைவர் கார் மீது சிலர் வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
கடலாடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருப்பவர் முனியசாமி பாண்டியன். இவர் தனது ஆதரவாளர்கள்நான்கு பேரோடு, டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார்.
பரமக்குடி அருகே பொன்னையாபுரம் ரயில்வே கேட் அருகே கார் சென்றபோது அங்கு மறைந்திருந்த சிலர்சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் வெடிகுண்டு வெடித்து, கார் கண்ணாடிகள் சிதறின. இதில் காருக்குள் இருந்த 5 பேரும் காயமடைந்தனர்.
காரை நிறுத்தாமல் செலுத்திய டிரைவர் துகுளத்தூர் அரசு மருத்துவமனையில் தான் காரை நிறுத்தினார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
Comments
Story first published: Saturday, July 26, 2003, 5:30 [IST]