கலெக்டர் அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய சந்தன மர திருடர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலேயே சந்தன மரங்கள் வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஏராளமான சந்தன மரங்கள்வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார்கைது செய்தனர்.
இந்த நிலையில் சந்தன மரம் வெட்டும் கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது. அதிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலேயே மீண்டும் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இரவு நேரத்தில் இங்குள்ள சில சந்தன மரங்கள் நடு பாகத்தில் வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டுள்ளன.
ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலேயே காவல் நிலையம் இருந்தும், சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications