மாஜி திமுக அமைச்சர்கள் குடும்பத்துடன் கோர்ட்டில் ஆஜர்
மதுரை:
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ், தனது மனைவியுடன்மதுரை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானாா.
அதேபோல மற்றொரு முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜும் தனது மனைவி, குழந்தைகளுடன் நேற்றுஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சமயநல்லூர் செல்வராஜ் வருமானத்திற்கு அதிகமான வகையில்சொத்து சேர்த்ததாக கூறி அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அவரது மனைவி புஷ்பவதி மகள்கள் சிந்தனைச் செல்வி மற்றும் சித்திரைச் செல்வி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று வழக்கு தொடர்பாக சமயநல்லூர்செல்வராஜ் மற்றும் அவரது மனைவி புஷ்பவதி ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் வழக்கைவருகிற 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதேபோல, ஈரோடு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் தனது மனைவி பாப்பாத்தி, மகன்பரமசிவம், மகள் கஸ்தூரி ஆகியோருடன் நேற்று ஆஜராகினார். வழக்கை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்துநீதிபதி ஜெயராம் உத்தரவிட்டார்.