வாஜ்பாயின் பேச்சு சந்தேகத்தை கிளப்புகிறது: கருணாநிதி
சென்னை :
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய செயல் திட்டத்திற்கும், அயோத்தியில் பிரதமர் வாஜ்பாய்பேசியுள்ள பேச்சுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. வாஜ்பாயின் பேச்சு பல்வேறுசந்தேகங்களை கிளப்புகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் இறுதி அஞ்சலிநிகழ்ச்சியில் நேற்று பேசிய வாஜ்பாய், அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும். கோவில்கட்டுவதை எதிர்த்து வரும் கட்சியினருக்கும் விரைவில் நல்ல புத்தி வரும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
1949ம் ஆண்டு ஒரு நாள் இரவு, மறைந்த ராமச்சந்திர பரமஹம்சும், இன்னும் சிலரும் சேர்ந்துஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் சிலையை வைத்து விட்டு வந்து விட்டனர்.
இதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்,உ.பி. மாநில முதல்வர் கோவிந்த் வல்லப பந்த் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சிலையை அங்கிருந்து அகற்றவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதேபோல, 1992ம் ஆண்டு கரசேவை என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது.மேலும் பாபர் மசூதியும் இடித்துத் தள்ளப்பட்டது. அந்த சமயங்களில் திமுக கடும் கண்டனம்தெரிவித்து கண்டனக் கூட்டங்களையும் நடத்தியது.
பின்னர் பிரதமர் ஆனவுடன் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் பேசுகையில், சிறுபான்மை மக்களின்உணர்வுகள் மதிக்கப்படும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்திலும் ராமர் கோவில் தொடர்பாக எதுவும்கூறப்படவில்லை.
இந் நிலையில், மறைந்த பரமஹம்சின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன பிரதமர் வாஜ்பாய்,அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறியுள்ளார். இது பல்வேறு சந்தேகங்களைக்கிளப்புகிறது.
நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட உறுதிமொழிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டத்திற்கும், வாஜ்பாய் பேச்சிற்கும் இடையே மாறுபாடுகள் உள்ளதோ என்ற ஐயம்ஏற்பட்டுள்ளது.
இதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications