வீரமணியின் கூட்டாளிகளை காவலில் எடுக்க போலீஸ் முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி வீரமணியின் கூட்டாளிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்துவதற்காகஅவர்களை போலீஸ் காவலில் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ளது அயோத்திக் குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்த தாதா வீரமணிசென்னை நகரையே உலுக்கி வந்த ரவுடியாக விளங்கினான். கடந்த வாரம் கடற்கரையில் வைத்து வீரமணியைபோலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து அவனது தம்பிகள் 4 பேர் உள்பட கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் கடலூர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அனைவரும் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால் 5 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதிக்குமாறுசென்னை எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தினால் வீரமணியின் கொலைகள், கடத்தல்கள், பணப் பறிப்பு, ஹெராயின்கடத்தல்கள் குறித்த பல்வேறு தகவல்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+