தேர்தல் நிதி: எதிர்க்கட்சியினர், பத்திரிகைகள் மீது கருணாநிதி தாக்கு
சென்னை:
கட்டுப்பாட்டுடன் திமுகவினர் தேர்தல் நிதி வசூலித்து வருவதைக் காணப் பொறுக்காமல் வாயும், வயிறும் எரிந்துவிமர்சிக்கும் எதிர்க்கட்சியினரையும், சில பத்திரிக்கைகளையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் நிநதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினர் தங்களது நிர்ணயத் தொகையைவிட கூடுலாக, அதாவது ரூ. 1 கோடி வரை வசூலித்துக் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் நிதியை முழுமையாக திரட்டிக் கொடுத்த முதல் மாவட்டம் என்ற பெருமையைத் தட்டிச்சென்றுள்ளனர்.
திமுகவினர் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வசூலித்து வரும் தேர்தல் நிதியைக் காணப்பொறுக்காத சில எதிர்க்கட்சியினர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது பரிதாபமாகஇருக்கிறது.
பொதுமக்களும், வியாபாரப் பெருமக்களும் தாங்களாக முன் வந்து நிதியளிப்பதை விமர்சிக்கும் சிலபத்திரிகைகளைப் பார்க்கும்போதும் பரிதாபமாக இருக்கிறது.
திமுகவுக்கு தேர்தல் நிதி குவிவதைப் பார்த்து பரிதறுகிறவர்கள், திமுகவை விமர்சிப்பதை கண்டிக்கிறேன் என்றுகூறியுள்ளார் அவர்.