"தங்க"த் தமிழர்களுக்கு உதவுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த 4000 தமிழர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யமுதல்வர் ஜெயலலிதா முன்வந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கம் தற்போது மூடப்பட்டு விட்டது. இதனால்4000க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் வேலையின்றி பட்டினியில் வாடி வருகின்றனர்.

இவர்களது நிலை குறித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின்பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு உதவ ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர் குடும்பத்திற்கும் தலா 30 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த உதவியை,தொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் வருகிற 6ம் தேதிகோலாருக்குச் சென்று நேரடியாக வழங்குகிறார்கள்.

கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2001ம் ஆண்டு நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. இதில் வேலை பார்த்து வந்த6000 பேரில் முக்கால்வாசிப் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையிழந்த தமிழர்கள் வேலைக்காக தற்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலர் பெங்களூர் வந்துவேலைக்கு முயற்சி செய்கின்றனர். ஆனாலும் கிடைத்தபாடில்லை.

இவர்களுக்காக கர்நாடக அரசும் கை கொடுக்கவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. தற்போதுஅதிமுக சார்பில் கோலார் தமிழர்களுக்கு ஜெயலலிதா உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+