For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்முகசுந்தரம் தாக்குதல் வழக்கு: வெல்டிங் குமாருக்கு தண்டனை குறைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதான தாக்குதலில் ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி வெல்டிங்குமார் உள்ளிட்ட 6 பேருடைய தண்டனையை 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த1995ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்தவக்கறிஞர் சண்முகசுந்தரம் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது.

இதுதொடர்பாக ரவுடி வெல்டிங் குமார் (சமீபத்தில் சேலம் மத்திய சிறையில் முன்னாள் திமுக அமைச்சர்முல்லைவேந்தனை பிளேடுகளால் தாக்கியவர்) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை தன்மை அமர்வு நீதிமன்றம், 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த சென்னன உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகடுங்காவல் தண்டனையாக குறைத்தது.

மேலும் 6 பேரும், சண்முக சுந்தரத்திற்கு தலா ரூ. 50,000 நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். தவறினால் மேலும் 2ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

வக்கீல் சண்முக சுந்தரம் தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X