For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலம்பிய சிறுத்தை .. பதறிய மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து 15க்கு மேற்பட்டவர்களைத் தாக்கியது.பின்னர் வாழைத் தோப்புக்குள் ஓடி பதுங்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், நேற்று காலை சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தையைப் பார்த்தகிராமத்து மக்கள் அதை விரட்ட முயன்றனர்.

ஆனால் சிறுத்தை அவர்கள் மீது பாய்ந்தது. இதில் பலரது உடலில் காயங்கள் ஏற்பட்டன. சிலருக்கு படுகாயம்ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காயமடைந்தனர்.

பின்னர் கிராமத்து மக்கள் சிறுத்தையை கட்டைகள், கம்புகளால் விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்களுக்குப்போக்கு காட்டிய சிறுத்தை அங்கிருந்த வாழைத் தோப்புக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் போனது. ஆனால் அவர்கள் உடனே வரவில்லை.மிகுந்த தாமதமாகத்தான் வந்தனர்.

பின்னர் வேலூர் ஆட்சித் தலைவருக்குத் தகவல் போய் சிறுத்தையைப் பிடிக்கவும், தேவைப்பட்டால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர்,காவல்துறையினர் மற்றும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X