ரூ. 90 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர்இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சனிக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ஒருவரைபோலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த சூட்கேஸில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் இருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்ட போது, 2 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூர்சென்றதாகவும், அங்குள்ள சிலரிடம் வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிலிருந்து கடத்துவதுதொடர்பாக விவாதித்ததாகவும், அவர்கள் கொடுத்த பணத்தையே தான் சென்னைக்குக் கொண்டுவந்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட பணம் அமெரிக்க மற்றும்சிங்கப்பூர் டாலர்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications