எஸ்மா சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
அத்தியாவசியப் பணிகள் பராமப்புச் சட்டம் எஸ்மா, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய டெஸ்மா சட்டம்பிரயோகிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, வேலைநிறுத்தம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்,லட்சக்கணக்கானோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இன்று மாலை அதில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், எஸ்மா சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கில் இன்று இறுதித்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்று காலை தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதில், எத்தனை பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதுஎன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 5000 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும்மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.