டவுன் பஞ்சாயத்துக்களை கலைக்க அரசு திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக டவுன் பஞ்சாயத்துக்களைக் கலைத்து விட தமிழக அரசுமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவி வருவதாக அடிக்கடி தமிழக அரசு கூறி வருகிறது.அதைக் காரணம் காட்டியே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள்பறிக்கப்பட்டன.

இந்த நிலையில், டவுன் பஞ்சாயத்துக்களின் மீது கை வைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. தமிழகத்தில் தற்போது 611 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும்கலைத்து விட அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இவற்றில் 44 டவுன் பஞ்சாயத்துக்கள், அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன்இணைக்கப்படும். மீதமுள்ள பஞ்சாயத்துக்கள், அருகாமையில் உள்ள கிராமப்பஞ்சாயத்துக்களுடன் இணைக்கப்படும்.

இந்த கலைப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதிலும், செயல் அதிகாரிகள், பில்கலெக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 14,000 பேருடைய பணி உபரியாக இருக்கும்.

இவர்களை வெவ்வேறு அலுவலகங்களில் சேர்ப்பதா அல்லது விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ்இவர்களை சேர்த்து விடுவதா என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அது முடிவானவுடன்,கலைப்பு நடவடிக்கை தொடங்கி விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+