8,454 பேருக்கு மீண்டும் வேலை: அதிகாரிகள் தீவிர ஆலோசனை
சென்னை:
உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டபடி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 6,072 பேர் தவிர மீதமுள்ள 8,454 அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலையில் சேர்ப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ், இன்று பல்வேறு துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, முதல் தகவல் அறிக்கையை காரணம் காட்டிமீண்டும் பணியில் சேர்க்க தமிழக அரசு மறுத்தது. 5,000 பேரைத் தவிர மற்ற அனைவரையும் மீண்டும் பணியில்சேர்க்க கடந்த 31ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 6,072 பேர் தவிர மற்ற 8,454பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் பிற்பகலில் இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் எடுக்கப்படும் முடிவு குறித்துஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர்இன்றிரவே இவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications