சென்னையில் அத்வானிக்கு கருப்பு கொடி காட்ட காங். திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்கு வருகிற 25ம் தேதி துணைப் பிரதமர் அத்வானி வருகை தரும்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியினர்கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி தனது பெயரை வழக்கிலிருந்து நீக்கச் செய்துள்ளார் அத்வானி. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

வருகிற 25ம் தேதி அத்வானி சென்னை வரும்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள். பாபர் மசூதியை இடித்த அத்வானி, துணைப் பிரதமர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்.

அதிமுக அரசின் அராஜக ஆட்சி குறித்து வருகிற 11ம் தேதி காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள்,பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவது ஆகியவற்றைக் கண்டித்து விவாதம் நடத்தப்படும்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக விசாரணை நடத்தி நல்ல தீர்வு எட்டப்படும் என்றார்அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+