For Daily Alerts
Just In
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: சம்பா சாகுபடிக்கு நம்பிக்கை
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் 2 நாட்களில் அணையின்நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபிணிஅணையிலிருந்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது.
நேற்று மாலை வினாடிக்கு 5,300 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணி வாக்கில் வினாடிக்கு7,458 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் இரண்டு அடிஉயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.இதனால் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடியை செய்துவிட முடியும் என்ற பெரும் நம்பிக்கையில் காவிரி டெல்டாவிவசாயிகள் உள்ளனர்.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]