சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கூட கிடைக்காது
சென்னை:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு விதிமுறைப்படி பாதி சம்பளம் கொடுக்கஅரசு விரும்பவில்லை. அவர்களுக்கு தொகப்பூதியம் போல ரூ. 4000 மட்டுமே கொடுக்க அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களில் தற்போது 6032 பேரைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6032 பேரில் 2769 பேரை சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களாக கருதுமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களாக கருதப்படவுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது.மேலும், வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட சகல சலுகைகளும் பாதியளவில் கிடைக்கும். ஆனால் இவ்வாறு பாதிச்சம்பளம் கொடுக்க தமிழக அரசு விரும்பவில்லை என்று கூறுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 4000 மட்டுமே மாதந்தோறும் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கணிசமான அளவு அரசுப் பணத்தை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தலைமைச் செயலக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும்அரசு ஊழியர்கள் சிலரை தலைமைச் செயலக பணிக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்குத் தேவையானஅரசு உத்தரவு தயாராகி விட்டதாகவும், விரைவில் அது பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் இடையே நிறையவேறுபாடுகள் உள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில் தலைமைச் செயலக பணி விதிமுறைகளில் திருத்தம்செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5116 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 1978 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர், 580 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்தற்போது அங்கு பணியில்இல்லை. இதனால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே, வெளிமாவட்ட ஊழியர்களை தலைச்ை செயலக பணிகளில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications