For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகிலேயே வயிற்றுக்கு சோறில்லாத அதிக மக்கள் வாழும் நாடு இந்தியா!!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உலகிலேயே பசியுடன் அதிக மக்கள் வாழும் நாடு இந்தியா தான் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் மனித வளர்ச்சிப் பிரிவின் ஆய்வறிக்கையை மத்திய திட்டத்துறை இணையமைச்சர் முகர்ஜி இன்றுமக்களவையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை 20.33 கோடி.

ஆப்பிரிக்க கண்டத்தில் பசியில் தவித்து வருபவர்கள் எண்ணிக்கை 18 கோடி. சீனாவில் இந்த எண்ணிக்கை 12கோடியாக உள்ளது. கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சுமார் 70.4 லட்சம் பேரும், லத்தீன் அமெரிக்காவில் 50.5லட்சம் பேரும், அரபு நாடுகளில் 30 லட்சம் பேரும் பசியால் வாடுகின்றனர்,

தெற்காசியாவில் 4 பேருக்கு ஒருவருக்கு வயிற்றுக்கு சோறில்லை. ஆப்பிரிக்காவில் 3 பேரில் ஒருவர் பட்டினிகிடக்கிறார்.

இந்தியாவில் தான் அதிக மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கடந்தஆண்டைவிடக் குறைந்துள்ளது. இந்தியாவில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டுகணிசமாகக் குறைந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X