இன்று சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
சென்னை:
7 நாட்கள் ஓய்வுக்குப் பின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தோழி சசிகலாவும் இன்று (வியாழக்கிழமை) சென்னைதிரும்புகின்றனர்.
கடந்த மாதம் 31ம் தேதி மாலை இவர்கள் ஹைதராபாத் சென்றனர். அங்குள்ள திராட்சைத் தோட்ட பண்ணைவீட்டில் தங்கியிருந்த இவர்கள் 10ம் தேதி தான் சென்னை திரும்பவதாக இருந்தது.
ஆனால் அரசு ஊழியர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலையேஜெயலலிதா சென்னை திரும்புகிறார். 8,063 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான நடைமுறைகள்தொடர்பான உத்தரவுகளை ஜெயலலிதா இன்றிரவு பிறப்பிப்பார் என்று தெரிகிறது.
மேலும் இன்று டெல்லியில் நடக்கும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைமைசெயலாளர் லட்சுமி பிரானேஷ் இரவில் சென்னை திரும்புகிறார். வந்தவுடன் அவர் முதல்வரைச் சந்தித்து காவிரிவிவகாரம், அரசு ஊழியர் விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பார்.