கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு: 6 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம்:

தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர் வீச்சில் 6 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜனவரி மாதமே நடந்த இந்த விபத்தை இப்போது தான் அணு மின் நிலையம் வெளியில் தெரிவித்துள்ளது.

Kalpakkam Atomic Research Centre

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு நிறைந்த ரசாயனக் கலவை (radioactive material)அருகிலேயே தரைக்கடியில் மிக ஆழத்தில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு(radiation) மிக அபாயகரமானது.

இதனால், கதிர்வீச்சின் தன்மை சிறிது குறையும் வரை இந்த ஆழமான தரையடி காங்க்ரீட் கண்டெய்னர்களில் இந்தரசாயனம் பாதுகாக்கப்படும். கதிர்வீச்சு சற்று குறைந்தவுடன் இன்னொரு தரையடி கண்டெய்னருக்கு மாற்றப்படும்.இங்கு வருடக் கணக்கில் இந்த கதிர்வீச்சு ரசாயனம் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரசாயனம் முழு கதிர்வீச்சை இழக்க நூற்றாண்டுகள் ஆகும்.

கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி ஒரு கண்டெய்னரில் இருந்து இன்னொரு கன்டெய்னருக்கு கதிர்வீச்சு கொண்டரசாயனத்தை மாற்றும்போது அதைக் கொண்டு சென்ற சிலிண்டெரின் வால்வு திறந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் அதிலிருந்து புறப்பட்ட கதிர்வீச்சால் 6 அணு மின் நிலைய ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால்,அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நோயோ அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியோதோன்றவில்லை என பாபா அணு சக்தி நிலையத்தின் இயக்குனர் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.

இவர் இந்தக் கதிர்வீச்சு விபத்து குறித்து நிருபர்களுக்கு பேட்டியும் தந்தார்.

கதிர்வீச்சின் அளவு குறித்து எச்சரிக்கை செய்யும் கருவிகள் இருந்தும் கூட அதை சரியாக பயன்படுத்தாததுஊழியர்களின் தவறு தான் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வருடத்திற்கு இவ்வளவு தான் கதிர்வீச்சுக்கு உள்ளாகலாம் என்ற அளவை விட கொஞ்சம் அதிகமானஅளவு கதிர்வீச்சீல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர, மற்றபடி அபாயகரமாக ஏதும் நடந்துவிடவில்லைஎன்றார்.

BARC director Bhattacharji meets press

நிருபர்களைச் சந்தித்த பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பட்டாச்சார்ஜி
இச் சம்பவத்தையடுத்து இந்த கதிர்வீச்சு ரசாயணம் வைக்கப்பட்டு பகுதி மூடப்பட்டுவிட்டது. அங்கு யாரும் செல்லஅனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் கமிட்டி அறிக்கைதந்த பின்னர் தான் இந்தப் பகுதி மீண்டும் செயல்படத் தொடங்கும். அப்போது கமிட்டி தரும் பரிந்துரைகளைஅமலாக்கப்படும்.

Hightened precautions in Kalpakkam atomic plant

பாதுகாப்பு கவசங்களுடன் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய ஊழியர்கள்
இச் சம்பவத்துக்குப் பின்னர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.அனைத்து ஊழியர்களும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய அணு ஆராய்ச்சி வரலாற்றில் நடந்த (வெளியில் தெரிய வந்த) பெரிய கதிர்வீச்சுச் சம்பவம் இதுதான்என்பது குறிப்பிடத்தக்கது.

-->
Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+